- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
- காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
- இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
- கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
திணை | உரிப்பொருள் | விளக்கம் |
---|---|---|
குறிஞ்சி | புணர்தலும், புணர்தல் நிமித்தமும் | ஆண் பெண் உடலுறவு |
முல்லை | (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் * ஆனிரையோடு மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நிலத்தியல்பு. * பொருள் தேடச் சென்றவர் மீளும் வரையில் (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது வாழ்க்கை இயல்பு * போருக்குச் சென்றவர் மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நாட்டின் இயல்பு * ஓதல் முதலான பிற பிற பிரிவுகளையும் இங்கு எண்ணிக்கொள்ள வேண்டும். ஒதற்பிரிவு என்பது கல்வி கற்கச் செல்லுதல். | புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல் |
மருதம் | ஊடலும், ஊடல் நிமித்தமும். | அகவொழுக்கப் பிரிவு * வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி பிணக்கிக்கொள்ளுதல் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும். | முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி என்பதனால் ஆற்றிக்கொண்டு இருத்தல் உரிப்பொருள் ஆயிற்று * கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று. |
பாலை | பிரிதலும், பிரிதல் நிமித்தமும் | பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும் |
சிறுபொழுது | மணி (24 மணி கணக்கீடு)(60 நாழிகை என்பது ஒரு நாள்) (24 நிமிடம் என்பது ஒரு நாழிகை) |
---|---|
காலை | 6 முதல் 10 மணி |
நண்பகல் | 10 முதல் 14 மணி |
எற்பாடு | 14 முதல் 18 மணி |
மாலை | 18 முதல் 22 மணி |
யாமம் | 22 முதல் 2 மணி |
வைகறை | 2 முதல் 6 மணி |
பெரும்பொழுது | கால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள் |
---|---|
இளவேனில் | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | ஆனி, ஆடி |
கார் | ஆவணி, புரட்டாசி |
கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனி | மார்கழி, தை |
பின்பனி | மாசி, பங்குனி |
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது | தொல்காப்பிய நூற்பா |
---|---|---|---|
குறிஞ்சி | கூதிர், முன்பனி | யாமம் | 952 |
முல்லை | கார், முன்பனி | மாலை | 952 |
மருதம் | - | வைகறையாகிய விடியல் | 954 |
நெய்தல் | - | எற்பாடு (ஏற்பாடு) | 954 |
பாலை (நடுவுநிலைத் திணை) | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் | 955, 956 |
வ.
எ ண் |
திணை
|
முதற்பொருள்
|
கருப்-
பொருள்கள் சில |
உரிப் பொருள்-
கள் | |||||||
நிலம்
|
பொழுது
| ||||||||||
1. | குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த நிலமும் |
நள்ளிரவு |
குளிர்காலம் | முருகன், குறவன், கிளி, மயில், புலி, அருவிநீர், சந்தன மரம், தினை அரிசி, வெறியாடல் |
(நிமித்தம்=
காரணம்; புணர்தல்= ஒன்று சேர்தல்) | |||||
2. | முல்லை | காடும் காடு சார்ந்த நிலமும் | மாலை | மழைக் காலம் | திருமால், ஆயர், காட்டுக் கோழி, மான், முயல், காட்டாறு, ஆடு, வரகு, குழலூதுதல், ஏறு தழுவுதல். |
(இருத்தல்=
பிரிவைப் பொறுத்து இருத்தல்) | |||||
3. | மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் | வைகறை | கார்காலம் முதலான எல்லாக் காலமும் உரியது. | இந்திரன், உழவன், அன்னம், எருமை, ஆறு, கிணறு, தாமரை, நெல். அரிசி, உழவு. |
(ஊடல்=
தலைவி, தலைவன் மீது கோபம் கொள்- ளுதல்) | |||||
4. | நெய்தல் | கடலும் கடல் சார்ந்த பகுதியும் | பிற்பகல் (சூரியன் மறையும் நேரம்) | கார்காலம் முதலான எல்லாக் காலமும் உரியது. | வருணன், பரதவர், கடற்காகம், சுறா மீன், பாக்கம், உவர்நீர்க் கேணி, தாழைமலர், மீனும் உப்பும் விற்றல், கடல் ஆடல். |
(இரங்கல்=
பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்) | |||||
5. | பாலை | வறண்ட மணற் பகுதி மணலும் மணல் சார்ந்த பகுதி- யும். | நண்பகல் | வேனிற் காலம் | கொற்றவை, எயினர், மறவர், புறா, பருந்து, செந்நாய், குராசு மலர், வழிப்பறி, பகற் சூறை. |
(பிரிதல்=
தலைவன் தலைவியைப் பிரிதல்) பிரிவும் அதை ஒட்டிய செயல்பாடு- களும் |
1등 사이트 - CasinoBeats
ReplyDelete3.8 Million Points. If your bet 벳 365 doesn't match your 바카라사이트 bet, you might 사이트 추천 win a big money if your bet loses! The best betting 네이버 룰렛 sites for Asian players BEST 바카라 to try